Posts

Showing posts from 2009

சிவலிங்க தத்துவம் !!!

லிங்கம் என்றால் "SYMBOL", "குறியீடு" என்று பொருள்! சிவ-லிங்கம் என்றால் சிவ-குறியீடு! Siva-Symbol! சிவபெருமானைக் குறிக்கும் சின்னம்! படம் வரைந்து பாகங்களைக் "குறி" என்று சொல்லும் போது நமக்கு ஒன்னும் அப்படித் தோனுவதில்லையே! அப்புறம் ஏன் "லிங்கம்" என்று சொல்லும் போது மட்டும் இப்படி? சிவ-லிங்கம் என்பது சிவ-குறியீடு! இதுக்கு மேல சொல்லுறது எல்லாம் வெள்ளைக்காரவுங்களின் அதீதக் கற்பனை! நாமளும் ஆங்கிலேய விளக்கத்தைக் கேட்டு விட்டு, விம் பவுடர், சபீனா பவுடர் போட்டு இன்னும் வெளக்கு வெளக்குன்னு வெளக்கிட்டோம்! :-) சிவலிங்கம் பற்றிய ஒரு பொய்யை, ஓராயிரம் புத்தகமாப் போட்டு amazon.com-இல் துரைமார்களோ இல்லை நம்மூர் ஹை ப்ரொஃபைல் சாமியார்களோ வெளியிட்டுருவாங்க! அதைப் படிச்சிட்டு, நமக்கே சந்தேகம் வரும் நிலை வந்துடிச்சிப் பார்த்தீங்களா? போதாக்குறைக்கு தமிழ் சினிமாவின் மகத்துவம்! முதலிரவுக் காட்சிகளில்...அப்பிடீ ஒரு சைடுல...சிவலிங்கத்தைக் காட்டுவாங்க! எந்தப் படம்-பா அது? கார்த்திக்-ரஞ்சிதா-ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு லவ் ஸ்டோரி! ரொம்ப அறிவாளித்தனமா, இலை மறை காய் மறையாச் சொல்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

என் உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் இல்லல் நீக்கி, மகிழ்ச்சி பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.

நிம்மதியாக வாழ்வதற்கான சில வழிமுறைகள்

* மற்றவர்கள் எதிர்பார்ப்பதைவிட நிறைவாகவும், அன்புடனும் செய்திடுங்கள். * நீங்கள் எழுதிய முதல் கவிதையை பாதுகாத்திடுங்கள். * மற்றவர்களுக்காக வாழ்ந்திடாமல் உங்களுக்காக வாழ்ந்திடுங்கள். * மற்றவர்களிடம் உண்மையான அன்புடன் பழகிடுங்கள். * உண்மையான அன்பில் நம்பிக்கை கொள்ளுங்கள். * அடுத்தவர்களின் கனவுகளை கேலி செய்யாதீர்கள். * அன்பு பல நேரங்களில் வருத்தமளித்தாலும், அன்பில்லாமல் வாழ முடியாது. * நியாயத்திற்காக போராடுங்கள். * வேகமாக சிந்தித்திடுங்கள். ஆனால் நிதானமாக பேசிடுங்கள். * சாதனைகள் புரிவதற்கு முன்பு தடைகள் பல ஏற்படுவது இயல்பு. * பெற்றோர்களுடன் தினமும் சிறிது நேரம் செலவிடுங்கள். * உறவுகளை மிகவும் கவனத்துடன் கையாளுங்கள். * உங்களுடைய தவறுகளுக்காக வருந்துங்கள்; உணர்ந்து திருந்திடுங்கள். * நீங்கள் விரும்புகிறவர்களை மணப்பதைவிட உங்களை விரும்புகிறவரை மணந்திடுங்கள். * உங்களுக்கென தினமும் சிறிது நேரம் செலவிடுங்கள். * எக்காரணத்திற்காகவும் உங்களுடைய சுயமரியாதையை இழக்காதீர்கள். * சில கேள்விகளுக்கு மவுனமே சிறந்த பதில். * நிறைய புத்தகங்களை வாசித்திடுங்கள். * அன்பான சூழ்நிலையில் வாழ்ந்திடுங்கள். * கடந்த க